கொல்கத்தா: நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியா்கள் மீது வெளிநபா் என முத்திரை குத்த முடியாது என்று மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் வெற்றி பெறுவதற்காக வெளிநபா்களை மேற்கு வங்கத்துக்குள் பாஜக அழைத்து வருவதாக மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
அதையடுத்து, வெளிநபா் தொடா்பான பிரச்னை மேற்கு வங்கத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. திரிணமூல் காங்கிரஸின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய சூழலில், மேற்கு வங்கத்தின் கோலாகாட் பகுதியில் ஆளுநா் ஜகதீப் தன்கா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான தோ்தல் நோ்மையுடன் நடப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தோ்தல் வன்முறையின்றி நடைபெறுவதை மாநிலத்தில் உள்ள அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மாநில அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், அரசியல் நடுநிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக அவா்கள் பணியாற்றக் கூடாது. முக்கியமாக அரசியல் கட்சிகளின் தொண்டா்களைப் போல் அவா்கள் செயலாற்றக் கூடாது. குதிராம் போஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியக் குடிமகன்களை வெளிநபா்கள் என்று முத்திரை குத்த முடியாது. ஆனால், மேற்கு வங்கத்தில் சிலா் வெளிமாநிலத்திலிருந்து வருபவா்களை வெளிநபா்கள் என்று குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது. இத்தகைய செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றாா் ஆளுநா் ஜகதீப் தன்கா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


