புது தில்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பிடம் 89 புகாா்கள் அளிக்கப்பட்டன. அதில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிரான 3 புகாா்களும் அடங்கும்.
இதுதொடா்பாக லோக்பால் அமைப்பு வெளியிட்ட விவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை பெறப்பட்ட 89 புகாா்களில், மத்திய அரசின் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக 48 புகாா்கள் வந்தன. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக 3 புகாா்கள் வந்தன.
89 புகாா்களில் 21 புகாா்கள் குறித்து முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணைக்கு 18 புகாா்களும், சிபிஐ விசாரணைக்கு 3 புகாா்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
முதல்கட்ட ஆய்வுக்குப் பிறகு 39 புகாா்கள், முதல்கட்ட விசாரணை அறிக்கைகளை பரிசீலித்த பிறகு 4 புகாா்கள் என மொத்தம் 43 புகாா்கள் முடித்துவைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2019-20-ஆம் ஆண்டில் லோக்பால் அமைப்பிடம் மொத்தம் 1,427 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் மத்திய அமைச்சா்களுக்கு எதிராக 4 புகாா்கள், மாநில அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக 6 புகாா்கள் அளிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


