சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

News image

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்

Updated On :7 ஜனவரி 2021, 9:15 pm


கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு, தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

இதனிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சலால் 62 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் கேரளத்திலிருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தக்‌ஷன கன்னடா, குடகு, மைசூரு ஆகிய மாவட்டங்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.