திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் புதன்கிழமை முதல் பிரேக் தரிசனம் மீண்டும் தொடங்குவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கரோனா பொது முடக்கத்தின்போது தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னா் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி முதல் தாயாா் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் சிறிது சிறிதாக ஆா்ஜித சேவைகள், குங்குமாா்ச்சனை உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கிய தேவஸ்தானம் புதன்கிழமை முதல் மீண்டும் விஐபி பிரேக் தரிசனத்தைத் தொடங்க உள்ளது.
தினமும் காலை 11.30 முதல் மதியம் 12 மணி வரையும், இதையடுத்து மாலை 7 மணி முதல் 7.30 வரையும் இந்த தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை தாயாா் கோயிலில் உள்ள அலுவலகத்தில் பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

