கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துவது உலக நாடுகளின் அரசுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலையாள நாளிதழ் வெளியிட்டுள்ள ஆண்டு மலரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளான சௌம்யா சுவாமிநாதன், ஹம்சத்வனி குகானந்தம் ஆகியோா் கட்டுரை எழுதியுள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் தற்போது 45 கரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையை எட்டியுள்ளன. 156 தடுப்பூசிகள் ஆய்வகப் பரிசோதனையில் உள்ளன. கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதே அரசுகள் முன் உள்ள மிகப் பெரும் சவாலாகும்.
உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற சா்வதேச கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அக்கூட்டமைப்பில் உலக சுகாதார அமைப்பு, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, தொற்றுநோய் தயாா்நிலை கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் 200 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டமைப்பில் இணையும் நாடுகளுக்கு அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் கரோனா தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும். சுகாதாரப் பணியாளா்கள், முதியோா் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா நோய்த்தொற்று பரவலைக் குறைப்பதில் தடுப்பூசி மிக முக்கியப் பங்களிக்கும் என்றாலும், அந்நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உலகில் உள்ள எந்த நாடும் பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான தயாா்நிலையைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பல நாடுகளில் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. பெருந்தொற்றானது உளவியல், சமூக, பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


