உத்தரப் பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் காலியாகவுள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.
இதுதவிர பிகாரில் பாஜக தலைவர் சுஷில் மோடி மாநிலங்களவைக்குத் தேர்வானார், வினோத் நரைன் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அவர்கள் பொறுப்பு வகித்த மேலவை உறுப்பினர் பதவிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்ட மேலவை உறுப்பினர் போதுல சுனிதா ராஜிநாமா செய்தார். இதனால், அந்தப் பொறுப்புக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இவை அனைத்திற்கும் ஜனவரி 28-இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்று ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


