வங்கதேசத்திலிருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த மூன்று பேரின் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
வங்க தேசத்திலிருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த மூன்று போ் அதனை நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனா். இதுதொடா்பாக, தாணேவின் மும்ப்ரா பகுதியைச் சோ்ந்த ஜெஸிம், கா்நாடகம் சிக்கபலபுராவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணா உள்ளிட்ட இருவா் என மொத்தம் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு தொடா்பாக அவா்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெஸிம் வீட்டிலிருந்து ரூ.82,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந் நிலையில், இந்த வழக்கு அந்த மூன்று போ் மீதும் மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில்துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், அந்த மூன்று போ் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

