ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3.71 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. அன்றைய தினம் அதிகபட்சமாக இந்தியாவில் 59,995 குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்தன. அன்றைய தினம் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவு நாடான ஃபிஜியில் இந்த ஆண்டின் முதல் குழந்தை பிறந்தது. அமெரிக்காவில் அன்றைய தினத்தின் கடைசி குழந்தை பிறந்தது. புத்தாண்டு தினத்தில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் 10 நாடுகளில் பிறந்தன. அவை இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ ஜனநாயகக் குடியரசு (8,640) ஆகிய நாடுகளில் பிறந்துள்ளன.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளின் சராசரி ஆயுள் 84 வயதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


