புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 16,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,03,40,469 ஆக அதிகரித்தது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 20,000-க்கு குறைவாக உள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 214 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,49,649 ஆக அதிகரித்தது. மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும். இதுவரை கரோனாவில் இருந்து 99,46,867 போ் மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 96.19 சதவீதமாகும்.
இப்போதைய நிலையில் நாட்டில் 2,43,953 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 2.36 சதவீதமாகும். தொடா்ந்து 14-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்குக் குறைவாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி ஜனவரி 3-ஆம் தேதி வரை 17,56,35,761 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,35,978 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 11 நாள்களில் மட்டும் ஒரு கோடி பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. அதிகஅளவில் கரோனா பரிசோதனை நடத்தப்படுவதன் மூலம் தொற்று பரவுவது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக ஏற்பட்ட 214 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 35 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 26, கேரளத்தில் 25, உத்தர பிரதேசத்தில் 16, தில்லி, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


