வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவை இந்தப் பரிந்துரையை உறுதிப்படுத்தும்பட்சத்தில், தற்போது ஓய்வு பெற்றுள்ள நீதிபதி ஜான் ஆர்.ஃபிஷருக்கு பதிலாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பணியாற்றுவார்.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றமானது, மேல்முறையீடுகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் என்றபோதிலும், அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் அதற்கு உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கீழவை, அமெரிக்க அரசுத் துறைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது.
இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள விஜய் சங்கர் தற்போது அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்குரைஞராகவும், மேல்முறையீட்டுப் பிரிவில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 2012-இல் அவர் நீதித்துறையில் இணைவதற்கு முன்னர் தனியாக வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


