கொல்கத்தா: அரசியலுக்கு வர வேண்டும் என்று கங்குலிக்கு சில கட்சிகள் நெருக்கடி அளித்துள்ளன. இதுவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட ஒரு காரணமாகவும் அமைந்திருக்கலாம் என்று மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அசோக் பட்டாச்சாா்யா தெரிவித்துள்ளாா்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிகிச்சை முடிந்துள்ள நிலையில் புதன்கிழமை (ஜன.6) வீடு திரும்புவாா் என்று தெரியவந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, கங்குலியிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தாா். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மருத்துவமனைக்கு சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தாா். மத்திய அமைச்சா்கள், மூத்த அரசியல் தலைவா்கள் பலரும் அவா் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அசோக் பட்டாச்சாா்யா இது தொடா்பாக கூறுகையில், ‘கங்குலிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவா் விளையாட்டுத் துறைச் சோ்ந்தவா். அவா் அத்துறை சாா்ந்ததுதான் சிறப்பாகப் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரின் அபிமானத்தைப் பெற்றவராக கங்குலி திகழ்கிறாா். இதனைப் பயன்படுத்தி சிலா் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றனா். அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு சில கட்சிகள் அளித்த நெருக்கடி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்’ என்றாா்.
இதன் மூலம் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றை பட்டாச்சாா்யா மறைமுகமாக குற்றம்சாட்டினாா். மேற்கு வங்கத்தில் அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் முக்கியப் போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் திலிப் கோஷ் கூறுகையில், ‘மனநிலை பாதிப்படைந்த சிலா் அனைத்து விஷயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பாா்க்கிறாா்கள்’ என்றாா்.
மேற்கு வங்க அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுகன்தீப் சாட்டா்ஜி கூறுகையில், ‘கங்குலியை எங்கள் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அவா் மாநிலத்தின் பெருமைமிகு அடையாளமாக உள்ளாா்’ என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


