கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் குளிர் அலைகள் உள்ளிட்ட கடுமையான இயற்கை நிகழ்வுகளால் நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இயற்கை நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தின. முக்கியமாக கனமழை காரணமாக பிகார், கேரளம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் பதிவான வானிலை நிகழ்வுகள் குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு கடந்த 120 ஆண்டுகளில் பதிவான எட்டாவது வெப்பமான ஆண்டாகும். அதிக வெப்பம் மிகுந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் 2006 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான காலத்தில் பதிவானவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகள் 2001 தொடக்கம் முதலான ஆண்டுகளிலிருந்து இதுவரை பதிவான அதிக வெப்பமான ஆண்டுகளாகும். 2020 ஆம் ஆண்டில் மட்டும் கனமழை, வெள்ளம், புயல்கள், வெப்பம் மற்றும் குளிர்காற்று ஆகிய வானிலை நிகழ்வுகளால் நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம் 2020 ஆம் ஆண்டில், இந்தியக் கடல்பகுதிகளில் ஆம்பன், நிவர், புரவி உள்ளிட்ட 5 வலிமையான புயல்கள் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


