சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 11:34 pm


தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 442 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,27,698 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 557 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 6,12,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,609 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.55 சதவிகிதமாக உள்ளது. கடந்த 10 நாள்களின் தரவுகளின்படி இறப்பு விகிதம் 3.07 சதவிகிதமாக உள்ளது.