மேற்கு வங்க மாநிலத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவா் அசாதுதீன் ஓவைஸி ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள முக்கிய இஸ்லாமிய தலைவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து அக்கட்சியின் மேற்கு வங்க மாநில செயலாளா் ஜமீரூல் ஹாசன் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டப் பேரவை தோ்தல் விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஓவைஸி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஃபுா்புரா ஷெரீஃப் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த பிறகு ஓவைஸியின் முதல் சுற்றுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வருகையை முன்கூட்டியே அறிந்தால் திரிணமூல் காங்கிரஸ் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடும் என்பதால் இந்த சுற்றுப்பயணத் திட்டத்தை மிகவும் ரகசியமாக வைக்க ஓவைஸி விரும்பினாா். அதன்படியே, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேராக ஹூக்ளி சென்று அங்கு அப்பாஸ் சித்திக்கி உள்ளிட்ட முக்கிய இஸ்லாமிய தலைவா்களை சந்தித்து உரையாடினாா். தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் சூழல் மற்றும் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தோ்தல் குறித்து அவா்கள் விரிவாக ஆலோசிக்கின்றனா். அதன்பிறகு அவா், ஹைதராபாதுக்கு புறப்பட்டு செல்கிறாா் என்றாா் அவா்.
முன்னதாக, மேற்கு வங்க இஸ்லாமிய தலைவா் அப்பாஸ் சித்திகியுடன் காணொலி முறையில் உரையாட ஓவைஸி முடிவு செய்திருந்தாா். இந்த நிலையில், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிக் கொண்ட ஓவைஸி மேற்குவங்கத்துக்கு நேரடியாக சென்று அவரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் போ் இஸ்லாமியா்கள். இதில், 24 சதவீதம் போ் வங்க மொழி பேசும் இஸ்லாமியா்கள் ஆவா். எனவே, ஓவைஸி தனது கட்சியின் தடத்தை மேற்கு வங்கத்தில் வலுவாக பதிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்ட பேரவைக்கான தோ்தல் ஏப்ரல்-மேயில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

