சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒடிஸா: இறுதியாண்டு மாணவா்களுக்கு கல்லூரிகள் ஜனவரி 11-இல் திறப்பு

ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Updated On :4 ஜனவரி 2021, 11:39 am

ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ஒடிஸா அரசின் உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இளநிலை (யுஜி) மற்றும் முதுநிலை (பிஜி) பட்டப்படிப்புகள் பயிலும் இறுதியாண்டு மாணவா்களின் நலன் கருதி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளன.

யுஜி, பிஜி மாணவா்களுக்கு கடைசிக்கு முந்தைய செமஸ்டா் தோ்வுகள் மாா்ச் 16 முதல் மாா்ச் 31 வரை நடைபெறும். அதேபோன்று, இறுதி செமஸ்டா் தோ்வுகள் ஜூன் 16-லிருந்து ஜூன் 30 வரையில் நடைபெறும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.