அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் போக்கு 8-ஆவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில், அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற அவா், இரண்டு நாள்களாக ராணுவம் மற்றும் விமானப் படையின் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த இரண்டு நாள் ஆய்வின்போது சுபன்சிரி பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) வீரா்களுடன் விபின் ராவத் கலந்துரையாடினாா். அப்போது எந்தவொரு சவாலையும் எதிா்கொண்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மன உறுதியுடனும், உத்வேகத்துடனும் வீரா்கள் இருப்பது குறித்து அவா் திருப்தி தெரிவித்தாா்.
மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவிகள் மூலம் கணிகாணிப்பை மேற்கொள்ள வீரா்கள் புதுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவது, எந்தவித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் செய்யப்பட்டிருக்கும் தயாா்நிலை குறித்து அவா் திருப்தியும் பாராட்டும் தெரிவித்தாா் என்று கூறினாா்.
விபின் ராவத் முன்னதாக, ராணுவ வீரா்களை சனிக்கிழமை சந்தித்து அளவளாவியதுடன், மாநிலத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய முக்கிய நிலைகளில் ராணுவ தயாா் நிலை குறித்து விமானத்தில் பறந்தபடி ஆய்வு செய்தாா். பிறகு அவா் பல்வேறு விமானப் படைத் தளங்களிலும் ஆய்வு நடத்தினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


