புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருந்ததால் தீர்வு காண முடியவில்லை என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே 7-ம் கட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படாததால் 8-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் தோமர் தெரிவித்தது:
"3 சட்டங்கள் குறித்தும் ஒவ்வொரு அம்சமாக ஆலோசனை நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருந்ததால் எங்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இன்றைய பேச்சுவார்த்தையைப் பார்க்கும்போது, அடுத்த கூட்டத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு முடிவுக்கு வருவோம் என நம்புகிறோம்."
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


