சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு மருத்துவமனைகளில் 'அக்கா உணவகம்': பிகார் அரசு திட்டம்

பிகாரில் தற்போது ஏழு மாவட்ட மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயங்கி வரும் அக்கா உணவகம் வெற்றிபெற்றதை அடுத்து, மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் அரசு உணவகங்களையும் அவர்களிடமே ஒப்படைக்க நிதி

News image

அரசு மருத்துவமனைகளில் 'அக்கா உணவகம்': பிகார் அரசு திட்டம்

Updated On :4 ஜனவரி 2021, 8:59 pm


பிகாரில் தற்போது ஏழு மாவட்ட மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயங்கி வரும் அக்கா உணவகம் வெற்றிபெற்றதை அடுத்து, மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் அரசு உணவகங்களையும் அவர்களிடமே ஒப்படைக்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது என்பதை செயல்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக வைஷாலி மாவட்ட மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அக்கா உணவகம் (தீதீ கி ரசோய்) ஏற்படுத்தப்பட்டது. இது பிறகு கயா, பூர்ணியா உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த 2020 நவம்பர் மாதம் அக்கா உணவகம் தரப்பில் ஆர்பிஐயுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தினமும் 50 ஆர்பிஐ ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் பிகார் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர், தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இயங்கும் உணவகங்களை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் அனைவரும் இந்த உணவகத்தின் ஊழியர்கள் அல்ல. அவர்கள் அந்த அமைப்பின் கூட்டாளிகளாக செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு மாத ஊதியத்தோடு, ஆண்டு இறுதியில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்டப் பங்கும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று பாலமுருகன் கூறியுள்ளார்.