சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2021, 3:35 am


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,47,011 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,362 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18,47,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 49,695 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 48,801 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,826 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,490 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, 24 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.