இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6-ஆம் தேதியில் இருந்தும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் 8-ஆம் தேதியில் இருந்தும் பயணிகள் விமான போக்குவரத்து சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.
இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜன.6-ஆம் தேதியும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜன.8-ஆம் தேதியும் போக்குவரத்து தொடங்குகிறது. வாரத்துக்கு 30 விமானங்கள் இயக்கப்படும். 15 விமானங்களை இந்தியாவும், 15 விமானங்களை பிரிட்டனும் இயக்குகின்றன. இந்த கால அட்டவணை வரும் 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு பயணிகளின் வருகைக்கேற்ப விமான சேவையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்தப் பதிவில் ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என்று ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவையை கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 7-ஆம் தேதி வரை இந்தியா ரத்து செய்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


