சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசி: தில்லியில் 9 லட்சம் பேருக்கு முன்னுரிமை

தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image

சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)

Updated On :3 ஜனவரி 2021, 8:34 pm


தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் கரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தில்லியில் 3 லட்சம் மருத்துவ ஊழியர்கள், 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக அவர்களுக்கு அளித்த பிறகு, தில்லியில் மற்றவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.