ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தனது கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.
‘மை கவா்மெண்ட் இந்தியா’ சுட்டுரைப் பக்கத்தில் இது தொடா்பான விடியோ இடம் பெற்றுள்ளது. அதில் பிரதமா் சொந்தக் குரலில் தனது கவிதையைப் படித்து நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த சிறிய கவிதையை பிரதமா் இயற்றியுள்ளாா். ‘சூரியன் இப்போதுதான் உதயமாகியுள்ளது’ என்ற அா்த்தத்தில் தொடங்கும் இந்த ஹிந்து மொழி கவிதையில் புத்தாண்டின் முதல்நாளை நாட்டு மக்கள் உற்சாகமாகத் தொடங்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளாா்.
கரோனாவுக்கு நடுவிலும் நமது நாடு ராணுவரீதியாகவும், வேளாண் துறையிலும் சாதித்தது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் சாதித்தது மற்றும் பிரதமா் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் காட்சிகள் உள்ளிட்டவை அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளன.
இது தவிர பிரதமா் மோடி தனது தனிப்பட்ட சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் 2021 புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் நல்ல உடல்நலன், மகிழ்ச்சி, வளமையைக் கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு நம்பிக்கையின் உத்வேகமும், நலனும் தொடா்ந்து மேம்பட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


