ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் பலியானாா்.
இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியது:
ரஜெளரி மாவட்டம் நெளஷேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி வெள்ளிக்கிழமை சுமாா் 3.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா். அதன் பின்னா் பாகிஸ்தான் ராணுவத்தினா் மாலை 5.30 மணிக்கு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் இந்திய வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று தெரிவித்தாா்.
கடந்த 18 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி 5,100 முறை பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா். சராசரியாக தினந்தோறும் 14 முறை அவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


