சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘பாஜகவின் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டேன்’: அகிலேஷ் யாதவ்

பாஜக அரசு வழங்கும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :2 ஜனவரி 2021, 11:03 pm

பாஜக அரசு வழங்கும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் பாஜக அரசு வழங்கும் கரோனா தடுப்பூசி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “பாஜக அரசை நம்ப முடியாது. நான் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கைதட்டம் மற்றும் பாத்திரங்களைத் தட்டுவதன் மூலம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துகிறது. தனது அரசு அமைந்தவுடன் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என அகிலேஷ் தெரிவித்தார்.