இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் இரு நாடுகளும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கால அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


