தில்லியில் விலையுயர்ந்த இருசக்கர வாகன விற்பனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.
தில்லியின் மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகன விற்பனையகம் செயல்பட்டு வந்தது.
இதனிடையே இன்று (ஜன.2) அதிகாலை 1.30 மணியளவில் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 25 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதில், இரு தளங்களிலிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதன் சேத மதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


