பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மீண்டும் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தின் பிர்பும் பகுதிக்கு ஜனவரி 9-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பிரசாரம் மேற்கொள்ளும் வகையிலும், தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக ஜனவரி 9-ஆம் தேதி மீண்டும் அவர் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு பாஜக பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொதுமக்களை சந்தித்து பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


