மத்திய அரசுடன் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 37-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அடிக்கடி மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசுடன் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ''ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லையென்றால், ஜனவரி 6-ஆம் தேதி பேரணியில் ஈடுபடுவோம்.
குண்டிலி, மனேசார், பல்வார் ஆகிய பகுதிகளிலிருந்து பிரம்மாண்ட பேரணியில் ஈடுபடுவோம். 50 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறுவது தவறானது.
எங்களது கோரிக்கையில் நாங்கள் நிலையாக உள்ளோம். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்'' என்று கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


