உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
முசாஃபர்நகர் மாவட்டத்தில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும், இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு வகை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி முகமது ஹாரூண் என்பவரும் மற்றும் சிலரும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கலவரத்தில் சுமார் 20,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாற்காலிகமாக தங்கும் வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

