சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முசாஃபர்நகர் கலவரம்: பொதுநல மனு மீது இன்று விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Updated On :12 செப்டம்பர் 2013, 8:08 am

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

முசாஃபர்நகர் மாவட்டத்தில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும், இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு வகை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி முகமது ஹாரூண் என்பவரும் மற்றும் சிலரும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கலவரத்தில் சுமார் 20,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாற்காலிகமாக தங்கும் வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.