அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.
சில நாள்கள் ஓய்வெடுத்த பிறகு வழக்கமான கட்சிப் பணிகளை சோனியா காந்தி மேற்கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்ற சோனியா, தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற வேளையில், சோனியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சோனியா, எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் பிரிவில் சுமார் ஐந்து மணி நேரம் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், தனது மகள் பிரியங்காவுடன் சோனியா காந்தி அமெரிக்காவுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி புறப்பட்டார்.
எனினும், அவரது உடல் நலக்குறைவு குறித்தும், அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியும், அமெரிக்க மருத்துவமனை நிர்வாகமும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பும், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சோனியா சிகிச்சை பெற்றுள்ளார். அதே மருத்துவமனையில் தற்போதும் அவர் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


