வரவிருக்கும் மக்களவைத் தேர்தல், "தலைமைக்கான வாக்கெடுப்பாக' இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைமை பிரச்னையால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.
திருவனந்தபுரத்தில் அரவிந்தர் கலாசார கழகம் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், "நாட்டில் நடப்பு அரசியல் சூழல்' என்ற தலைப்பில் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், "முதன்மை எதிர்க்கட்சி பாஜக தனது நிரூபிக்கப்பட்ட தலைமையை, ஆளுமையை முன்நிறுத்தும்போது அத் தேர்தல் ஏறக்குறைய பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதாகவே அமைந்துவிடும்' என்று கூறினார்.
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஜக ஆளுமைகொண்ட தலைமையை நம்பியிருக்கும்போது, காங்கிரஸ் கட்சி வாரிசு தலைமையை நம்பி நிற்கிறது. பிரதமர் என்பவர் முடிவுகள் எடுப்பவராக இருக்க வேண்டும். அது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். ஆனால் தற்போது பிரதமர் மன்மோகன் சிங் கார்ப்பரேட் நிறுவன முறையில் ஆட்சி நடத்துகிறார். முடிவுகள் அரசுக்கு வெளியே எடுக்கப்படுகின்றன. அவற்றை செயல்படுத்தும் அதிகாரியாக பிரதமர் இருக்கிறார். இத்தகைய "கார்ப்பரேட் மாடல்' மூலம் மக்களாட்சியை நடத்த முடியாது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


