கேதார்நாத் கோயிலில் இயற்கை பேரழிவால் தடைபட்ட பூஜைகள், 86 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கின.
கேதார்நாத் கோயிலில், மழை, வெள்ளம் காரணமாக கடந்த ஜுன் 16-ஆம் தேதியிலிருந்து பூஜைகள் தடைபட்டன. பூஜைகளை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணிக்கு, தலைமை குருக்கள் ராவல் பீமா சங்கர லிங்க சிவாச்சாரியார், கோயிலின் பிரதான வாயிலை திறக்க, பூஜைகள் தொடங்கின.
தலைமை குருக்களுடன் நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் மற்றும் பத்ரிநாத் கேதார்நாத் கமிட்டி அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். தினமும் நடைபெற்று வந்த பூஜை நீண்ட நாள்கள் தடைபட்டதற்காக பரிகார பூஜையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா பங்கேற்பதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரால், டேராடூனில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. கேதார் பள்ளத்தாக்கில் நிலவிய கடும் பனிமூட்டத்தால், பூஜை நிகழ்ச்சிகளை ஊடகங்களால் ஒளிபரப்ப இயலவில்லை.
பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குள் மீண்டும் யாத்ரிகர்களை அனுமதிப்பது குறித்து இந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள கோயில் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


