பிரதமர் மன்மோகன் சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் என்று பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பு. அவர் தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் ஆவார்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தோல்வியடைந்து விட்டனர். எனது கண்ணோட்டத்தில் அவர்கள் பொருளாதார நிபுணர்களே இல்லை. அல்லது பயனற்ற, மோசமான பொருளதார நிபுணர்கள் என்று கூறலாம். நாட்டை ஆளும் உரிமையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இழந்து விட்டது. தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்றவை நாட்டின் நிதி நிலை மோசமடைவதற்கு வழிவகுக்கும். இவற்றால் பணவீக்கம் உயரும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


