ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்துக்கே எங்களது முழு ஆதரவு என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதை வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா யாத்திரை தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து மாநில மக்களுக்கு அந்தக் கட்சியின் கெüரவத்தலைவர் ஒய்எஸ் விஜயம்மா பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எம்ஐஎம் ஆகிய கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால் ஆந்திரத்தைப் பிரிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக, தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வாக்குகளை பெறுவதற்காகவும், மக்களவை சீட்டுக்காகவுமே மாநிலத்தை பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தக் கொள்கை சீமாந்தரா பகுதி மக்களுக்கு செய்யும் பெரிய அநீதியாகும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

