அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ரூ.64.45 ஆக சரிந்தது.
இறக்குமதியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் டாலரின் தேவை அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கு விலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 340 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,905 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.
ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை 63.45 ஆக இருந்தது. புதன்கிழமை அன்னியச் செலாவணி வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ரூபாய் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிற்பகல் 2.45 மணியளவில் ரூ.64.45 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. ரூபாயின் மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டது. எனினும் அவை எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை.
பவுண்டுக்கு நிகரான மதிப்பு ரூ.101.3: பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது. பவுண்ட்டுக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.101.3 என்ற
சரிவை புதன்கிழமை எதிர்கொண்டது. முன்னதாக
செவ்வாய்க்கிழமை, பவுண்டுக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு ரூ.100.52 ஆக இருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

