சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிலக்கரி சுரங்க விபத்து: சாவு எண்ணிக்கை 14ஆக உயர்வு

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் நிலக்கரி குவியல் சரிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 5:45 am

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் நிலக்கரி குவியல் சரிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான வசுந்தரா-கர்ஜன்பஹால் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து சனிக்கிழமை நிகழ்ந்தது. சம்பவத்தன்று, திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி குவியலில் நிலக்கரி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென நிலக்கரி குவியல் சரிந்ததில் அவர்கள் உயிருடன் புதையுண்டனர்.

மீட்புப் பணியில் நிறுவன ஊழியர்களுடன் போலீஸாரும் இணைந்து ஈடுபட்டனர். சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியில் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர்.

அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நிலக்கரி குவியல் சரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.