சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் காயம்

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 11:38 am

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி 7,000 சுற்றுகள் சுட்டுள்ளதோடு, பீரங்கித் தாக்குதலும் நடத்தியது.

இந்நிலையில், ஜம்முவில் எல்லையையொட்டி அமைந்துள்ள ஆல்ஃபா மாஷியல் எல்லைச் சோதனைச் சாவடி மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பவன்குமார் காயமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் உரிய பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே மதியம் 2 மணிவரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இத்தகவலை எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மேற்கொள்ளும் இரண்டாவது போர் நிறுத்த மீறல் இதுவாகும். முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள நாராயண்பூர் சோதனைச்சாவடி மீது பாகிஸ்தான் படையினர் கடந்த 5ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டனர். இதில் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் ராம்நிவாஸ் மீனா காயமடைந்தார். அவரது மார்பில் தோட்டா பாய்ந்தது. அவர் ஆபத்தான நிலையில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒமர் அப்துல்லா வலியுறுத்தல்:இந்தியாவுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஸ்ரீநகரில் கூறுகையில், ""பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவலை மேற்கொள்வதற்காகவோ, தங்கள் அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவோ பாகிஸ்தான் தரப்பு இவ்வாறு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடுகிறதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால், பாகிஸ்தான் இப்படி அத்துமீறுவதை நிறுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையில் 2003ஆம் ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.