சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலைக்கு இன்று முதல் பஸ்கள் நிறுத்தம்

திருமலைக்கு வரும் பஸ்கள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 5:23 am

திருமலைக்கு வரும் பஸ்கள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.

தனி தெலங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாள்களுக்கு மேல் நடந்து வரும் போராட்டம் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திருமலைக்கு பஸ் சேவை நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் திருமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் முழு அளவில் பஸ் சேவை நிறுத்தப்பட உள்ளது.

இதுவரை வரலாற்றிலேயே இடம் பெறாத ஒன்றாக திருமலைக்கு செல்லும் பஸ்கள் சேவை நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு திருப்பதி போக்குவரத்து கழக மேலாளர் மகேஷ்வர ராவிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை பலன் தரவில்லை. திருமலைக்கு பஸ்களை இயக்க மாட்டோம் என்று போக்குவரத்துத் துறையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள போராட்டத்தில் தேவஸ்தான ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனத் தெரியவந்துள்ளது.