சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 8:21 am

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்களில் எம்.பி.க்கள் சிலர் வெள்ளிக்கிழமை தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து காங்கிரஸ் மேலிடத்திடம் கடிதம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவ் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில், நான்கு மத்திய அமைச்சர்களும், 7 எம்.பி.க்களும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்கள் நான்கு பேரும் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் எம்.பி.க்களில் சிலர் தெலங்கானா முடிவை காங்கிரஸ் மேலிடம் வாபஸ்பெற நிர்ப்பந்திக்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கூறியுள்ளனர்.