சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொதுச் செயலர் கொலை: விசாரிக்க 3 நபர் குழு அமைத்தது பாஜக

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு மூன்று நபர் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.

Updated On :22 ஜூலை 2013, 8:37 am

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு மூன்று நபர் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரும் உறுப்பினர்களாக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மற்றும் கர்நாடக எம்.பி. அனந்த் ஹெக்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இக்குழுவை ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் சமீப காலமாக தங்கள் கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.