சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வகைசெய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் புதன்கிழமை தெரிவித்தார்.
சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கிடும் வகையில் அதற்குரிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பற்றி நாடாளுமன்றமே விவாதம் நடத்தி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இதை தெரிவித்தார் கபில் சிபல்.
இது தொடர்பாக நிருபர்களிடம் கபில் சிபல் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் விவாதித்துள்ளோம்.
இதற்காக தில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான கருத்துருவுக்கு அமைச்சரவை அனுமதி தந்துள்ளது.
இனி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பிரமாணப்பத்திரத்தில் உள்ளபடி மசோதா தயாரிக்கப்படும். கூடிய விரைவில் இந்த மசோதாவை அரசு கொண்டுவரும். மற்றபடி சட்டம் இயற்றவேண்டியது நாடாளுமன்றம்தான். பிரமாணப் பத்திரம் மீது உச்ச நீதிமன்றம் உரிய முடிவு எடுத்தபிறகு மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் கபில் சிபல். முன்னதாக உச்சநீதிமன்றம், சிபிஐ அமைப்பை தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசு முனைப்பு காட்டிவருவதற்கு புதன்கிழமை திருப்தி தெரிவித்தது.
நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய அமர்வு, வெளியார் குறுக்கீடு இன்றி சிபிஐ சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை தொடங்கியுள்ளதை பாராட்டியது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

