வங்கி தொடங்குவதற்கு உரிமம் கேட்டு எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம், இந்திய தபால் துறை உள்ளிட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்று ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறது.
புதிதாக வங்கி தொடங்குவதற்கான வழிமுறைகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
தொடர்ந்து, ஜூன் மாதத்தில் இது தொடர்பாக சில விளக்கங்களையும் வெளியிட்டிருந்தது. திங்கள்கிழமை (ஜூலை 1) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளா
கும்.
இந்த நிலையில், 26 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் தனியாரும் வங்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.
இதில் குறிப்பிடத் தக்க விண்ணப்பதாரர்கள் எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம் மற்றும் இந்திய தபால் துறையாகும்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கேபிடல், டாடா சன்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்ய பிர்லா, ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்டவையும் விண்ணப்பித்துள்ளன.
உரிமம் பெறும் நிறுவனங்கள் 18 மாதங்களில் வங்கியைத் தொடங்க வேண்டும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

