உத்தரகண்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொருள் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள சேதங்களை தவிர்க்க மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஒரு மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய நீர் ஆணையம் 1975-ஆம் ஆண்டு உருவாக்கிய வரைவு மசோதா இது என்பது குறிப்பிடத் தக்கது. வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளை அகற்ற இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
ஆனால் பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வரைவு மசோதாவுக்கு சில மாநிலங்கள் தங்களது கருத்துக்களைக் கூட தெரிவிக்கவில்லை.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை இது குறித்து மத்திய நீர் வள அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தது:
குடியிருப்புகளை அகற்றிய பின்பு அங்குள்ள மக்களின் மறுவாழ்வுக்கு திட்டமிடுவது மிகவும் கடினம் என்பது அவர்களது வாதம்.
வெள்ள அபாய பகுதிகளை கையகப்படுத்தி மக்களை மீள்குடியிருப்பு செய்வது போன்ற நடைமுறைகளை மிகச் சரியாக மாநில அரசுகள் செய்து முடிக்காவிட்டால் மத்திய அரசிடமிருந்து அதற்கான நிதி உதவி கிடைப்பதில் சிக்கல்கள் எழலாம் என்றும் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இப்போது பல தாழ்வான பகுதிகள் வர்த்தக ரீதியாக மேம்படுத்தப்பட்டு பயன்படுகிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் அப்பகுதிகளில் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது மாநில அரசின் கடமையாகிறது. அந்த இடங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நஷ்ட ஈடு கோர முடியாது என்று மாநிலங்களுக்குத் தெரியும்.
வெள்ள அபாயம் ஏற்பட சாத்தியக் கூறு இருக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றை அமைக்க இந்த மசோதா வகை செய்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
மத்திய நீர் வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் சமீபத்தில் நடைபெற்ற கங்கை வெள்ளத் தடுப்பு வாரியத்தின் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்த வரைவு மசோதாவில் குறிப்பிட்டிருக்கும் பல பிரிவுகள் மிகவும் பழமையானவை என்றார். அவற்றை மறுபரிசீலனை செய்து, மீண்டும் ஒரு புதிய வரைவு மசோதாவை உருவாக்கி மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.
வெள்ள அபாயத் தடுப்பு தொடர்பாக, மணிப்பூர் மாநிலம் 1978-ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால் வெள்ள அபாய இடங்கள் எவை என்பதை அந்த மாநிலம் இன்னும் வரையறை செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
ராஜஸ்தானிலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றபோதிலும் அங்கு இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

