சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிதி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சரிடம் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் விசாரணை

நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

Updated On :22 ஜூன் 2013, 6:42 am

நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள சி.ஐ.டி. போலீஸாரின் தலைமையகத்தில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பான மற்ற தகவல்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெளதம் தேவ், ""சி.ஐ.டி. போலீஸாரை திருப்திப்படுத்துவது (விசாரணையில் அவர்கள் விரும்பும் பதில்களை கூறுவதன் மூலம்) என் வேலையல்ல. முதல்வர் மம்தா பானர்ஜி, விசாரணை என்ற பெயரில் என்னை இரண்டு மணிநேரம் சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்திருக்க விரும்பினார். அதைத்தான் போலீஸார் செய்தனர்'' என்றார்.

முன்னதாக பெங்கால் கிரீன்ஃபீல்டு வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தால்டாலா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்கால் கிரீன்ஃபீல்டு உள்ளிட்ட 8 ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இடதுசாரி கூட்டணியின் தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ""பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்' என்றார்.