சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நக்சலைட்டுகளுடன் மோதல்: காவலர் சாவு; 3 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 6:27 am

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

கோண்டாகான் மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீஸôர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். கேஷ்கால் நகரில் உள்ள பார்கான் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை வழிமறித்த 40 நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சண்டையில் காவலர் சஞ்சய் மாண்டவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமைக் காவலர் கமலேஷ், காவலர்கள் தனசிங், அமர் சச்லாம் ஆகியோர் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்திய பின், நக்சலைட்டுகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கோண்டாகான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டி.ஷ்ரவன் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் நக்சலைட்டுகள் பலருக்கும் காயமேற்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை சக தீவிரவாதிகள் மீட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.