ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டுள்ளார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பி.கே.ஹரிபிரசாத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ராஞ்சியில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
அப்போது அங்கிருந்த மற்றொரு பிரிவினருடன் ஹரிபிரசாத் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி மனோஜ் ரத்தன் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு மாநில காங்கிரஸ் தலைவர் சுக்தோ பகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

