மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் குறித்து கூச்சல் எழுப்புவதற்காக சில உள்ளூர் டிவி சேனல்கள், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அசன்சோல் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது:
எனது அரசு மீது புழுதிவாரித் தூற்றும் பணியில் உள்ளூரைச் சேர்ந்த சில டிவி சேனல்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அவை பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்போம். என்னையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயையும் கொல்ல சதி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைகோத்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

