உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்ரிகர்களில் இதுவரை 202 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 83 பேர் வெள்ளிக்கிழமை தமிழகம் சென்றனடைந்தனர்.
மீதமுள்ளவர்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதற்கிடையே, உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த் துறை ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட உயர்நிலைக் குழு உத்தரகண்ட் தலைநகர் டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை சென்றது.
இது தொடர்பாக, டேராடூன் சென்றுள்ள ஜக்கையன் கூறியது: ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தில்லியில் உள்ள தமிழக அரசின் அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
வியாழக்கிழமை இரவு 83 யாத்ரிகர்கள் தில்லி வந்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், 119 தமிழக யாத்ரிகர்கள் வெள்ளிக்கிழமை தில்லிக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு, தங்குவதற்கான இடம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுவார்கள். ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிக்கு வரும் தமிழக யாத்ரிகர்கள் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள் என்று ஜக்கையன் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

