தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மத்திய தலைமைக் குழு தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதன் மூலம் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தேச நலனுக்கு விரோதமாகவும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு
வருகிறார்.
எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைப்பது ஏற்கத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக மொய்லி செயல்பட்டு வருகிறார் என்பதை கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா ஏற்கெனவே அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறும் எரிவாயுவுக்கு கொடுக்க வேண்டிய விலை குறித்து ரங்கராஜன் குழு மற்றும் தனது அமைச்சக அதிகாரிகள் கூறியதைவிட அதிகம் கொடுக்க வேண்டுமென்று மொய்லி தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எரிவாயு விலையை 60 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்ற பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பதை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒத்திவைத்துள்ள சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

