வீரதீரச் செயல்களுக்கான விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வீரச்செயல்களுக்கான குடியரசுத் தலைவர் விருது பெறும் காவலர்கள், துணை ராணுவப் படையினருக்கான சிறப்பு ஊக்கத் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. குடியரசுத் தலைவர் விருது பெறுவோறுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3,000-ஆகவும், காவலர்கள் விருது பெறுவோருக்கு ரூ.900-ல் இருந்து ரூ.2000-ம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் ஷிண்டே.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பணியின்போதும், நக்சல்கள், பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போதும், வீரதீர செயல் புரிவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நக்சல்களை ஒடுக்க ரூ.2079 கோடி ஒதுக்கீடு:நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் நக்சல் ஆதிக்கம் மிகுந்த 9 மாநிலங்களுக்கு ரூ.2079 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இத்தொகையில் ரூ.1981 கோடி சிஆர்பிஎப் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியைக் கொண்டு பாதுகாப்பு படையினரின் திறன் மேம்படுத்தப்படும்.
மீதமுள்ள ரூ.98.85 கோடி முன்தொகையாக 9 மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றார் ஷிண்டே.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

